கடந்த சில காலத்தில் கோவை புறநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் திருடப்பட்ட மற்றும் பொதுமக்களால் தவறவிடப்பட்ட 146 கைப்பேசிகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட கைப்பேசிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அதன் உரிமையாளர்களிடம் இன்று தன் அலுவலகத்திற்கு வரவழைத்து வழங்கினார். 

 

மீட்கப்பட்ட இந்த கைப்பேசிகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.