164 பயணிகளுடன் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால் விமானம் தரையிறக்கப்பட்டது.

 

காலை 7 மணி அளவில் ஓடுதளத்தில் விமானம் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது இடது பக்க இஞ்சின் பகுதியில் இரண்டு கழுகுகள் வந்து இடித்துக் கொண்டதால் அப்போதே விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

கோவை சர்வதேச விமானநிலையத்தில் விமான பொறியாளர்கள் அந்த விமானத்தை சோதனை செய்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது.