பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும்.

 

மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆகிய இடங்களில் பாரம்பரிய வழக்கப்படி மிக சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

 

அதற்கு பின்னர் இதர மாவட்டங்களிலும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. 

 

 

இந்நிலையில் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் நீதி மய்யம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும் எனவும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் மெரினாவில் நடத்த வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.