தொழில், ஆன்மீகம், அரசியல், கல்வி, சமூகசேவை என பலதுறைகளில் வரலாறு படைத்த பொள்ளாச்சியை சேர்ந்த நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மகாலிங்கம் அவர்களின் மகனும் முன்னணி தொழிலதிபரும் ஆன சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை - பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்டச் சாலைக்கு அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களது பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நா. மகாலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.