மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளது. 

 

இந்நிலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு வினப்பிக்க கடைசி நாள் நீடிக்கபடுவதாகவும், 3 பிரிவினருக்கான போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இன்று தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

 

 மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுப்பிரிவு (15முதல்35வயது வரை) பள்ளி (12முதல் 19வயது வரை) கல்லூரி ( 17 முதல் 25 வயது வரை) மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பு இல்லை) மற்றும் அரசு ஊழியர்கள் ( வயது வரம்பு இல்லை) ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.

 

இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவினருக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

 

அனைத்து விளையாட்டிற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 17.01.2023 லிருந்து 23.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Image : Representational