கோவை டாடாபாத், சூலூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 21, 2023 (சனிக்கிழமை) கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

சூலூர் துணை மின் நிலையத்தில் நடை பெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக:-


சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

டாடாபாத் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக:-


மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலையின் ஒரு பகுதி, நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பார்க் 1, 2, 3 தெருக்கள், ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலையின் ஒரு பகுதி, பூ மார்க்கெட் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கே கௌடர் சாலை, சுக்கிரவாரப் பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகர், காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகரின் ஒரு பகுதி, ஆவாரம்பாளையத்தின் ஒரு பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.