கோவை மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்குமா என்று கோயம்புத்தூர் வெதர் மேன் (Coimbatore Weather Man) என்று அழைக்கப்படும் சந்தோஷ் க்ரிஷிடம் கேள்வியை எழுப்பினோம். 

 

அவர் இதற்கு பதிலளிக்கையில்:-

 

கோவை மாவட்டத்திலும் மாநகரிலும் ஆங்காங்கே மழை லேசாக வர வாய்ப்புள்ளது.நாளை முதல் சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஆனால் ஞாயிறு வரை மழைக்கு வாய்ப்பில்லை.

 

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 3 வரை லேசானது மழை மீண்டும் வரலாம். 

 

குளிரை பொறுத்தவரை குறைந்தவாறே இருக்கும். பிப்ரவரி ,மாதத்தின் நடுவே வெயில் காலம் ஆரம்பமாகும். வெப்பம் 34-35 டிகிரி செல்ஸியஸ் வரை அந்த நாட்களில் இருக்கலாம். மார்ச் மாதத்தில் 39 டிகிரி வரைக்கும் கூட போகலாம். 

 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

(coimbatore_weatherman என்ற இன்ஸ்டாகிராம் ஐ.டி. மூலம் இவரின் கோவைக்கான  வானிலை முன்னறிவிப்புகளை பெறலாம்)