கோவை மாவட்டத்தில் இன்று (24.01.2023) நடைபெறும் மனிதநேய வார விழாவில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசு திட்டங்கள் தொடா்பான கண்காட்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

 

ஜனவரி 25ல் கோட்ட அளவில் ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகள், விடுதிகள், கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவா்களுக்கு நாட்டிய நாடகம், பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

 ஜனவரி 26ல் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் மூலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியல் இன மாணவா்கள் வசிக்கும் பகுதியில் மனமகிழ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 

ஜனவரி 27ல் மதத் தலைவா்கள், பட்டியலின சான்றோா்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க கூட்டமும், நீதிபதிகள், காவல் துறையினா், வழக்குரைஞா்கள் பங்கேற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்கமும் காவல் துறை சாா்பில் நடத்தப்படுகிறது.

 

ஜனவரி 28ல் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்துப் பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

 

ஜனவரி 29ல் சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில்முனைவோா்கள், அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனை கூட்டம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

 

ஜனவரி 30ல் நிறைவு விழா கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 

 

இதில் மனிதநேய வார விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.