தென் மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் இந்திய மாநிலங்களவையின் உறுப்பினர்களாக பா.ஜ.க. நியமனம் செய்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவும் ஒருவர்.

"... ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்று கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்," என்று ஜூலை 2022ல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக தமிழில் பதவி ஏற்ற இளையராஜா அன்மையில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை. 

டிசம்பர் 2022ல் 13 நாட்கள் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காமல் இந்த
கூட்டத்தொடரில் தன்னுடைய  வருகை பதவியை பூஜ்ஜியமாக வைத்துள்ளார். 


ஆனால் மக்களுக்கு அவர் ஒரு தலைசிறந்த கலைஞனாக இன்றும் சேவை செய்துகொண்டுள்ளார் என்பதை குறிப்பிட வேண்டும். வரும் பிப்ரவரி 4 தேதி, ஞாயிறு ஹைதராபாத்தில் உள்ள LB ஸ்டேடியத்தில் அவருடைய இசை கச்சேரி நடைபெறுகிறது. நிச்சயமாக அந்த கச்சேரிக்கு வருகை புரிந்து ஹைதராபாத்தை ஒரு கலக்கு கலக்குவார்.