தைப்பூசத்தை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு வழியாக கூறியதாவது :
கோவை - திண்டுக்கல் இடையே ஜனவரி 27, 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய 6 நாள்கள் பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தையொட்டி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, இந்த நாள்களில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.43 மணிக்கு பழனியை சென் றடையும். பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
இதேபோல, திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில், மேற்கண்ட தேதிகளில் திண்டுக் கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு பழ னியை சென்றடையும். மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும்.
இந்த ரயிலானது, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.