கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் படி, இன்று, கோவை மாநகரம் முழுவதும், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு, இன்று முழுவதும் அந்த நபர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான பயனத்தை உறுதி செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளனர்.

 

 

இதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா சாலை அருகே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.