கோவை, புரூக் பில்ட் ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், கோவை மாநகர காவல் - போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக இன்று (29.01.2023) மாலை 4.00 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

என்ன மாற்றம்? எப்படி செல்லவேண்டும்?

 

 

புரூக் பீல்ட் ரோட்டிலிருந்து, தேவாங்கபேட்டை சிக்னலில், வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

 

 

எனவே, வலதுபுறம் புரூக் பில்ட் ரோட்டிலிருந்து, பூ-மார்கெட், R.S.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஒட்டிகள், தேவாங்கபேட்டை சிக்னலில், வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சர்ச் ரோட்டில், வலதுபுறம் திரும்பி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

 

அதேபோல், புரூக் பீல்ட் ரோடு வழியாக, நேராக அவினாசி ரோடு பழைய மேம்பாலத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள், தேவாங்கபேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல், தொடர்ந்து பயணம் செய்யலாம்.

 

 

தேவாங்கபேட்டை ரோடு மற்றும் அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு எந்தவிதமான போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை.