குறு சிறு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அனைத்து மாவட்டத்திலும் விற்பனைக்கான ஒரு சந்தை வளாகம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அனைத்து வகை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தி துறை நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களின் தேவைகளை, கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்திட 'அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு' துவங்கப்பட்டுள்ளது.

கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் இந்த 'அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு'க்கு மாநில பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டமைப்பு பற்றி அவர் கூறியதாவது :-

அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் துவக்க விழா மற்றும் மாநில நிர்வாக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 8000 மேற்பட்ட உற்பத்தி துறைகளும் ஜாப் ஒர்க் நிறுவனங்களும் அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பில் (AEF) உள்ளனர்.  இந்த கூட்டமைப்பை சிறந்த முறையில் வழிகாட்ட இதற்கான நிர்வாக குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை 4 மண்டலங்களாக நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழில்த்துறை குறித்த முழு அனுபவம் பெற்றவர்கள் ஒவ்வொரு துறைக்கும் செயலாளராகவும், அவர்களுக்கு துணையாக இணை செயலாளர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளிடம் இணைந்து  துறை வளர்ச்சிகான கோரிக்கைகளையும் தீர்வுகளையும் கொடுத்து இணைந்து செயல்பட உள்ளனர்.

தமிழக அரசின் பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக நடைபெறும் சங்கங்கள் மட்டும் இந்த   கூட்டமைப்பில்  இணைக்கப்பட்டு வருகின்றனர். கூட்டமைப்பு துவக்க விழாவில் தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் சிவ சுந்தரவல்லி IAS, துரைசாமி, முன்னாள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இந்த கூட்டமைப்பின் தலைவராக முத்துரத்தினம், மாநிலபொதுச் செயலாளராக ஜெயபால் மற்றும் பொருளாளராக கோவிந்தராஜ் பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களுடன் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இக்கூட்டத்தில், சிட்கோ தொழிற்பேட்டைகளில் கிரையத் தொகை குறைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சில  மாவட்டங்களில்  உள்ள  தொழிற்பேட்டையில் குத்தகை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுஅதை தவிர்த்து முழுகிரையம் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் (MSME) குறு மற்றும் சிறு தொழில்களுக்கு தனியாக ஒரு நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறை சங்கங்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு AEF ஆகும். அதனால் இக்கூட்டமைப்பை அரசின் அனைத்து கருத்து கேட்ப்பு கூட்டம், நிதி ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குறு சிறு தொழிற்சாலைகள் விற்பனை செய்யக்கூடிய பொருட்களுக்கு அந்த நிறுவனம் கட்ட வேண்டிய GST தொகையை மறுமாதத்தில்  கட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சிறு குறு நிறுவனங்கள் அத்தொகையை கட்டி விடுகிறார்கள். அந்த நிறுவனங்கள் கட்ட வேண்டிய  GST auto credit முறையை பயன்படுத்தி நிறுவனங்கள் அத்தகையை பயன்படுத்தி கொள்கிறார்கள். பில் தொகையை கொடுக்காமல் GST கிரெடிட் எடுக்க முடியாத சூழ்நிலை GST PORTAL ல்  மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்,  தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தையும், சூரிய ஒளி மின்சாரத்திற்கான யூனிட் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் அரசின் முன்வைக்கப்பட்டது.