கோவை மாநகராட்சியுடன் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்  இனைந்து கோவையில் மக்களுக்கான விழாவாக முன்னெடுத்துள்ள ஆல்-இன்-ஆல் அங்காடி பொருட்காட்சி நிகழ்ச்சி கோவை பெரியகுளத்தில் இன்றும் நாளையும் (10.9.22 முதல் 11.9.22) நடைபெறுகிறது. 

வார இறுதிகளில் பொதுமக்களுக்கு பொழுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதில் பெண்களுக்கான அலங்கார பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், மின்சார உபகரணங்கள், சமையல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேரு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வார இறுதிநாட்களாக இருப்பதால் இந்த காலத்தில் பெரியகுளத்தில் படகு சவாரியும் உண்டு. 


இந்த  பொருட்காட்சியை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன்  திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.