தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


3 வயது வரை கட்டணம் இல்லை என்பதை தற்போது 5 வயது வரை உயர்த்தியும், 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.