செவ்ரோலேட் விற்பனை செய்த கார் மாடல்கள் வைத்திருக்கும் கார் உரிமையாளர்களுக்கு நல்ல செய்தி. என்ன தான் இந்தியாவை விட்டு வெளியேறி 5 ஆண்டுகள் ஆனாலும் இந்த நிறுவனம் வரும் 2024 வரையும் தன்னுடைய கார் சர்வீஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை தொடர்ந்து வழங்கபோவதாகவும், அதேபோல் 2024க்கு பின்னரும் அதை எடுத்து செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளது. 

இந்தியாவில் இப்போதுவரை 170 வாடிக்கையாளர்- விற்பனையாளர் டச் பாயிண்ட்  மூலம் செவ்ரோலேட் நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறும் முன்னர் வரை வாங்கிய கார்களுக்கான பிரத்தியேக சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. 

அனைத்து செவ்ரோலேட் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை, பேட்டரி மற்றும் முக்கிய பாகங்களை  வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெற ACDelco என்ற அதன் துணை நிறுவனம் மூலம் முயற்சி எடுத்துவருகிறதாம்.