சமீபத்தில் சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

ஆய்வின் இறுதியில் இவர்களுக்கு ஏற்பட்ட தொற்றுக்கு காரணம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்திய BF.7 வகை ஓமிக்ரான் வைரஸா என உறுதி செய்யப்படும்

 

 இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

 

தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படு

 

 எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

 

 இன்னும் 4 நாட்களில் எந்த மாதிரியான வைரஸ் தொற்று என்பது தெரியவரும். தொற்றால் பாதிக்கப்பட்ட தாய், மகள் நலமுடன் உள்ளனர்.

 

இவ்வாறு கூறினார்.