நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியிலிருந்து 4 மாணவ,மாணவிகளும்  ஈரோடு  ஸ்ரீசைதன்யா பள்ளியிலிருந்து 5 மாணவ,மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் இக்குழுவினர் அமெரிக்கா சென்றனர்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்வெளி ஆராய்ச்சி தலைவர்கள்,விஞ்ஞானிகள் என பலர் கொண்ட இந்த நிகழ்வில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி,சிறுகோள் சுரங்கம் என்ற தலைப்பில் காட்சிப்படுத்துதல் மற்றும் விளக்கவுரை மேற்கொண்டனர்.

மாநாடு முடிந்து கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  காந்திபுரம் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியின் டீன் அன்பழகன்,முதல்வர் அனீஷ் அகஸ்டின் மற்றும் நிர்வாகிகள் ஹரி பாபு,நாகேஸ்வரராவ்,பாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மாநாட்டில் காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் பயிலும், கிரிநாத், ராகுல், யோகித், கார்திகேயா ஆகியோரும்,ஈரோடு ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் பயிலும் சஷ்திகா ஸ்ரீ உமையாள்,ஹேப்பி ஜிந்த், சஞ்சித் முரளிதரன்,கிரிஷ்வந்திகா என ஒன்பது மாணவ,மாணவிகள் சென்று வந்தது குறிப்பிடதக்கது.