சோமையம்பாளையம் ஊராட்சி சார்பில், ரூ. 4.09 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கபட்ட மருதமலை அடிவாரம் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இதற்கான கட்டுமான பணிகள் 2020ல் துவங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் 9 கடைகள், 1 ஹோட்டல், 2 விருந்தினர் தங்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, அலுவலகம் உள்ளிட்டவை அடங்கும்.


2022 மார்ச்சில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த புது பேருந்து நிலையத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு பிறகு அது  சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர்  மற்றும் வார்டு கவுன்சிலர்களால் குத்துவிளக்கேற்றப்பட்ட பின் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.