கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக சொல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலையில் உள்ளது இதை எடுத்து உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.


இதற்காக ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு அதில் உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.

அந்த புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பெரிய மீன் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்து உள்ளது. இதை எடுத்து புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.


இதுகுறித்து கோவை மாநகர் மையக்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-


உக்கடம் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவடை மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது.மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடைபெற உள்ளது இதை ஒட்டி சில நேரங்களில் உக்கடம் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.