வியாழக்கிழமை துவங்கவிருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு  நீட் தேர்வு முடிவுக்கு பின் இரண்டு நாட்களுக்கு பின்னர் துவங்கும் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி புதன் அன்று தெரிவித்தார். 

"பல்கலைக்கழங்கங்கள், பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் உருவாகுவதை தடுக்கவும், மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பணம் செலுத்தியும், மருத்துவ கல்லூரிகளில் பணம் செலுத்தியும் சிரமமடைய வேண்டாம் என்பதற்க்காக இந்த முடிவு  மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது"

"எனவே நாளை கலந்தாய்வு கிடையாது. நீட் முடிவு வந்து 2 நாட்களுக்கு பின்னர் பொறியியல் பொது கலந்தாய்வு துவக்கப்படும்,  அணைத்து தேதிகளும் அதற்கு பின்னர் அறிவிக்க பட்டு செயல்படுத்தப்படும்," என்றார்.