மசினக்குடி அருகே உள்ள நீர்நிலை அருகே இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டை போட்டுகொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள மாயாறு வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக அமைந்து வருகிறது. 

இங்கு காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் ஆக்ரோஷமாக வந்தது.  

சிலநேரம் ஒன்றுக்கொன்று பார்த்துக்கொண்டு நின்றது தீடீரென சண்டை போட துவங்கின. இந்த சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.