ரூ. 134 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான தலைமை நீரேற்றும் நிலையத்தின் கட்டுமான பணிகளை 

 

கடந்த மாதம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாடிய இணை மேலாண்மை இயக்குனர் சரவணன் நேரில் பார்வையிட்டு இந்த பணிகளை ஆய்வு செய்தார். 

 

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லித்துறை ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தலைமை நீரேற்றும் நிலையத்தின் கட்டுமான பணிகளை இன்று தமிழ்நாடு மின், நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேனாட்டு கழக தலைவர் ஆர். அம்பலவாணன் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உடன் சென்று ஆய்வு செய்தார்.

 

மேலும் இத்திட்டத்திற்கென கட்டன்மலை அடிவாரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.