நாளை காலை 11 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற உள்ளது.

 

 

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை குறித்த பல்வேறு குறைகளை மேயரிடம் கோரிக்கை மனுவாக வழங்கலாம் என்று கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.