கோவை மாவட்டத்தில் கோடை வெயில் உஷ்ணத்தை கூட்டி வரும் நிலையில் இன்று மதியம்  இடையர்பாளையம், கோவில்மேடு, டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 


இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் மழையினால் மாலை முதல் பல இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.