கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் இதயம் நேற்று எடுத்துச் செல்லப்பட்டது.
மூளைச்சாவு அடைந்தவர்களால் உயிருக்கு போராடும் பிறருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக உதவிட முடியும் என்ற விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு அதிகமாவதால் இறந்து போனவர்களின் சில உடல் பாகங்கள் தேவை உள்ள மற்றவர்களுக்கு பொருத்துவதற்காக தானமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னையில் தரையிறங்கிய பின்னர் விமானத்தில் இருந்து இதயம் உடனடியாக அதை பொருத்தப்பட வேண்டியவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு தாமதம் இல்லாமல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட் டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.