கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டம்பாளையம் கிராமத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த தொழில்பேட்டை மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏதுவாக ரூ. 24.61 கோடி மதிப்பில், 316 ஏக்கர் நிலத்தில் 585 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோவை ஆட்சியர் சமீரன் பங்குபெற்றார்.