மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அவசர மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு தேவைப்படும் வசதிகள் கிடைக்க ITC நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதியாக ரூ.20 லட்சம் நிதி இன்று வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை கோயம்புத்தூர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமாரிடம் ITC நிறுவனத்தின் தலைமை அலுவலர்கள் வெங்கட் ராவ், சலீம், மனிதவள மேலாண்மை துறைத் தலைவர் மகேந்திர பாபு ஆகியோர்மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வந்து வழங்கினர்.
இந்த தருணத்தில் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் கணேசும் பங்கேற்றார்.