கோவையில் இன்று மதியம் 2:30 மணிக்கு மேல் பல இடங்களில் நல்ல காற்றுடன் கன மழை பெய்தது. பீளமேடு போன்ற சில இடங்களில் இடியும் மின்னலும் அதிகமாக காணப்பட்டது.

இது போல கோவை சாஸ்திரி வீதி குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மேல் மின்னல் விழுந்ததால், அதில் தீ பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், தீயை அணைக்க தீ வண்டி சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் தெரிகிறது. 


Image & Info : Dinamalar