திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்று வரும் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குப்படும் காலத்தை நீட்டிக்க வேண்டும், முக்கியமாக நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.


'தென்மண்டல கவுன்சில் கூட்டம்' என்றழைக்கப்படும் இந்த கூட்டத்தில்
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய மாநிலங்கள் சார்ந்த பிரச்சனைகளை பேசி அதற்கான முடிவுகளை எடுக்க இக்கூட்டம் உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.