ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசர் தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.

பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், அமைச்சர் நாசர் பால்வளத்துறை அமைச்சர் ஆனதும் பால் விலையை குறைத்தார். அவரின் கீழ் ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.