நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையத்தை சுற்றிலும்  காடுகள் சூழ்ந்த நிலையில் உள்ளது.

நேற்று இரவு நடுவட்டம் காவல் நிலையத்தில் காவலர்கள் ஒரு சிலர் மட்டும் இருந்ததன் காரணமாக அவரவர் தங்கள் பணிகளை பார்த்துக் கொண்டிருந்த போது, காவல் நிலையத்திற்குள் சிறுத்தைப்புலி ஒன்று சத்தமில்லாமல் நுழைந்துள்ளது. உள்ளே நுழைந்த சிறுத்தைப்புலி, அங்கு உலாவிவிட்டு, யாரும் இல்லை என சென்றுள்ளது. 

சிறுத்தை வெளியே  சென்ற பின் காவலர் ஒருவர் கதவை மூடியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில்  பதிவாக்கியுள்ளது. காவலர்கள் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுத்தையிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொண்டனர்.