கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றை கையாள அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

 

மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கை மற்றும் இதர கருவிகள், வார்டுகள் ஆகியவற்றை இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர் வைத்திருந்தனர். 

 

இந்திய முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான அவசர கால ஒத்திகை( Mock drill)  நிகழ்வு நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று செண்ணை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான அவசர கால ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அதேபோல் டெல்லியில் உள்ள சப்டார் ஜுங் மருத்துவமனையில் நடந்த நிகழ்வில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.