12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாநிலத்தில் கோவை மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3ந் தேதி வரை நடைபெற்றது. 


கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட 363 பள்ளிகளை சேர்ந்த 15,794 மாணவர்கள் 18, 533 மாணவிகள் என மொத்தம் 34,327 பேர் பிளஸ் 2 தேர்வவை எழுதினர்.


 இதனிடையே தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் என மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33,493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதன் மூலம் மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டும் கோவை மாவட்டம் 4வது இடத்தை பிடித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.