கோவை விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் ஒரு நிலம் தொடர்பான விவகாரத்தில் தன்னுடைய உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதை புகார் தெரிவிக்க முதலில் கோவில் பாளையம் காவல் நிலையத்தை நாடியுள்ளார். 

 

அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் தன்னை அலைகழிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

 

இருந்தும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இவருக்கு ஆதரவாக ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள் (அகில இந்திய இந்து நாடார் பேரவை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி அமர்ந்தனர். 

 

இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரடியாக  சந்தித்து மனுவை சிவலிங்கம் தரப்பினர் வழங்கினர்.மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.