கோவையில் இன்று திடிரென மாலை நேரத்தில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. 

இதனால் மீண்டும் அவினாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானி பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேலும் இரும்பு பேரிகார்டுகள் போடப்பட்டது. 

இதனால் சுரங்கு பாதையில் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்திற்கு திருப்பி விடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவினாசி சாலையில்  நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றது.


இதே போல் லங்கா கார்னர் சுரங்க பாதையில் தண்ணீர் சூழ்ந்ததால் திருச்சி சாலைக்குச் செல்லும் வாகனங்களும் செல்லாததால் பள்ளி முடிந்து பேருந்து காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றனர்.


மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தின் பழைய நுழைவு வாயிலில் தண்ணீர் சூழ்ந்தது. இதனிடையே சுரங்க பாதைகளில் உள்ள நீரை இராட்சச மோட்டார்கள் மூலம் அகற்றிவருகின்றனர். மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்செய்து வருகின்றனர்.