கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்  நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ஆகஸ்ட் 20-ம் தேதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளையொட்டி, சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  எஸ்.பிரகதீஸ்வரன், மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆர்.நாகராஜன், ஏ.சுபாஷினி ஆகியோர் செய்திருந்தனர்.