2023-24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்துவதில் பாக்கி வைத்துள்ள பலரும் நேற்று கோவை மாநகரில் நடைபெற்ற சிறப்பு வரி வசூல் முகாமில் சொத்து வரி செலுத்தியுள்ளனர். 

 

மொத்தம் 5540 பேர் நேற்று நடந்த முகாமில் வரி செலுத்தியுள்ளனர். 

இதன் மூலமாக மாநகராட்சிக்கு ₹ 8.16 கோடி வரிவசூல் ஆகியுள்ளது. 

 

இன்றும் வரி வசூல் முகாம் நடைபெறுகிறது இதன் மூலம் மொத்தம் ₹ 15 கோடி அளவுக்கு சொத்து வரி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.