நகராட்சி நிர்வாக மென்பொருளில் உள்ள வரிவிதிப்புதாரர்களின் விபரங்களை மேம்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன் குடும்ப அட்டையினை இணைக்கவும், வணிக நிறுவனங்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்கள் குறித்த விபரங்களை இணைக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துவரிவிதிப்பு புத்தக நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்களுடனும், மேலும் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுகின்ற வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி புத்தக நகல் அல்லது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி ஆவணங்களுடனும் வார வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை நேரில் அணுமி இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் 31.01.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு கோயம்புத்துர் மாநகராட்சி ஆணையாண் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.