சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனவும் உலகின் பல நாடுகளில் இருப்பது போன்று 25 ஏக்கர் பரப்பளவில் 5000 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டமாக பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் பேசுகையில் இத்தகவலை தெரிவித்தார்.

 

இந்த பிரம்மாண்ட பன்னாட்டு அரங்கத்தில் அமையவுள்ள அம்சங்கள் பற்றி அவர் பேசுகையில்:

 

இந்த அரங்கத்தில் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன நிறுத்தும் வசதிகள் ஆகியவை இங்கு அமையும்.தமிழ்நாட்டு இளைஞர் சக்திகளை, அறிவு சக்திகளை பூமியில் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் வகையில் இந்த அரங்கம் அமையும். 

 

வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்ப கூட்டங்கள், உலக திரைப்பட விழாக்கள் நடத்தும் வகையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.