பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் துாய்மையான சூழல், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், கிராமங்களை சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்ற நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை அரசு துவங்கியுள்ளது.

 

நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை குறித்த விவரம் பின்வருமாறு:-

இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களுக்கு பிரச்சாரம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்கவேண்டும்.



கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு வாரியாக குப்பை கொட்டும் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டும்.


தூய்மைகாவலர்கள், தன்னார்வலதொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நல பனி திட்ட (NSS) மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.


வீடுகள், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்கவேண்டும்.


திடக்கழிவு மேலாண்மைத் தளங்களைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டும். காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்க வேண்டும்.


மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை திறம்பட அப்புறப்படுத்த சுகாதாரமான குப்பை கிடங்குகளை பயன்படுத்த வேண்டும்.


போதிய இடவசதி இல்லாத அல்லது அதிக அளவில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் உள்ள ஊராட்சிகளில், ஒன்றிய அளவில் கூடுதல் இடங்கள் கண்டறியப்பட வேண்டும்.


ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபிற பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.


இந்த பிரச்சாரத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். 



Source: MYCITYCOIMBATORE