ட்விட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் 40 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தை 'ஹட்சன் ராக்' எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
2022 ஆரம்ப கட்ட காலங்களில் ட்விட்டரில் இருந்த ஒரு பாதுகாப்பு குறைபாடை பயன்படுத்தி இந்த ஹேக்கிங் நடைபெற்று இருக்கிறது.
இவ்வாறு ஹேக் செய்து பெறப்பட்ட முக்கிய தகவல்களை இணையதளத்தில் ஏலம் விட்டு லாபம் சம்பாதிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் சுந்தர் பிச்சை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ஜூனியர் போன்ற பெரும்புள்ளிகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான மாதிரிகளையும் அந்த ஹேக்கர்கள் சமுதாயத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது இந்த ஹேக்கர்கள் இந்த முக்கியமான தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு பதிலாக ட்விட்டரை அண்மையில் ரூ. 3,00,000 கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்கிய உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான இலான் மஸ்கிடம் வழங்குவதற்கு பெரும் தொகையை பேரம் பேசி வருவதாக தகவல்கள் எழுந்துள்ளன.