அல்ட்ரா பாட்மிண்டன் போட்டி: நான்கு மேட்ச்சிலும் கேரளா கிளப் வெற்றி!
- by David
- Sep 20,2022
அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நிறுவனம் சார்பில் கோவை மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் இடையேயான இரட்டையர் பாட்மின்டன் போட்டி செப்டம்பர் 7ம் தேதி துவங்கி தற்போது இரண்டாவது லீக் போட்டிகள் 'Best of Three-knockout' முறையில் நடைபெற்றுவருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேட்ச்சுகளில் கேரளா கிளப்பின் செந்தில்/முத்துக்குமார், பங்காரு/சங்கீத், கோகுல்/சரவணன் மற்றும் பாலாஜி/பிரபாகரன் ஜோடிகள் வெற்றி பெற்றன.
இந்த இரண்டாவது லீக் போட்டிகள் முடிந்த பின் குவாட்டர் பைனல், அதன் பின்னர் இறுதி சுற்று நடைபெறும். செப்டம்பர் 25 ஆம் தேதி பரிசுகள் வழங்கும் விழா நடைபெறும்.
பொதுமக்கள் நலனுக்காக செயல்படும் மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் ஆகியோருக்குள் நல்ல அறிமுகம் மற்றும் உறவு இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.