கோவையை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளரும் ஆன பிரதீப் ஜோஸ் சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று  ஊர் மக்களுக்கு வஸ்திர தானம் வழங்கினார்.



வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில்,வஸ்திர தானம் வழங்கும் விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.


இதில் அந்த பகுதி பெண்களுக்கு பட்டு புடவை வஸ்திரத்தை பிரதீப் ஜோஸ் வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இது போன்று இன்னும் பல சேவைகளை தாம் தொடர்ந்து செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.விழாவில் கோவில் கமிட்டி நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள்,அவரது ரசிகர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.