வனப்பகுதிகளில் தனியார் நிர்வாகத்தினரால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவையில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று கூறினார்.
கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பார்வையிட்டடார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை வால்பாறை ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உள்ளது.
குறிப்பாக வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, யானைகள் இறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வால்பாறை பகுதியில் சில எஸ்டேட்டுகளில் சிறுத்தைகள், புலிகள் அதிகமாக உள்ளது. மேலும் இங்குள்ள யானை முகாம்கள் முதலை பண்ணைகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
யானைகள் முகாமுக்கு தேவையான நிதிகளை முதலமைச்சர் ஒதுக்கி ஒதுக்கியுள்ளார்.
வருடத்திற்கு 80க்கும் மேற்பட்ட யானைகள் இயற்கையாகவே இருக்கிறது.
இது தவிர்த்து மின்சாரம் தாக்கியோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்தால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
யானைகள் இறப்பு என்பது இயற்கையானதை தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்கள் ஏற்பட்டால் உதாரணமாக ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
தற்போது மதுக்கரை பகுதியில் கூட ₹ 7 கோடி மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அந்த தகவலை வனத்துறையினருக்கு அளிக்கிறது. இதனால் வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டவோ அல்லது ரயிலை நிறுத்தவோ முயற்சிகளை மேற்கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.