கோயம்புத்தூர் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் வாகனம் இல்லாத நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

 

 

இதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, பணியை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.