உலக திரைப்பட விருதுகளில் மிகவும் பெருமைக்குரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95-வது பதிப்பு இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

 

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு சென்ற ஆண்டில் உலகெங்கும் இருந்து 276 திரைப்படங்கள் தகுதி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 301 திரைப்படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.   

 

 

இதில் 10 இந்திய திரைப்படங்களும் தேர்வாகி உள்ளன. 

 

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும், ரிஷ்ப ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படமும், பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படமும் தேர்வாகி உள்ளன.

 

இத்துடன் கங்குபாய் கத்தியவாடி மற்றும் தி காஷ்மீர் பைல்ஸ் ஆகிய இந்தி படங்களும், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட குஜராத்தி படமான தி செல்லோ ஷோ படமும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

 

 மேலும் மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.