வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க கோவை கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை!
- by David
- Apr 28,2025
பவனி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டும் வண்டல் மண் எடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் தங்கள் மனுவில் கூறியுள்ளதாவது:-
சிறுமுகை பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு குறையும்போது காலம் காலமாக வண்டல் மண் எடுத்து விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்து வருகின்றனர்.
தற்ச்சமயம் நீரின் அளவு குறையும்போது வண்டல்மண் எடுக்க ஆய்வு செய்து பவானி சாகர் பொதுப்பணித்துறைக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து உத்தரவு வழங்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மே, ஜூன் ஆகிய 2 மாதங்கள் மட்டும் மண் எடுக்க முடியும். பருவமழை வந்துவிட்டால் நீரின் அளவு அதிகரித்துவிடும். ஆகவே மாண்புமிகு கலெக்டர் அவர்கள் இந்த மனுவின் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்புள்ள கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.