ஏப்ரல் 4ம் தேதி கோவை மருதமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், கோயில் அறங்காவலர் குழுவும் செய்து வருகின்றன.ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் ஆய்வு செய்துவருகின்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் பல தானங்களை செய்துவருகின்றனர். இந்நிலையில் கோவை ராஜவீதியில் உள்ள சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் தங்க முலாம் பூசப்பட்ட அபிஷேக குடம் கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து சுமங்கலி ஜூவல்லர்ஸ் தரப்பில் கூறியதாவது :-

இந்தக் குடத்தின் சிறப்பம்சமாக முன்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் இருப்பது போலவும் பின்புறம் மருதமலை முருகன் நிற்பது போலவும், அருகே இரண்டு பகுதிகளிலும் மயில் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அபிஷேக் குடமானது தைப்பூசம், சஷ்டி போன்ற முக்கிய விசேஷ காலங்களில் மூலவர் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் வகிக்கும் என தெரிவித்துள்ளார்.