பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரத்தில் நிறுத்த நீதிமன்றம் உத்தரவு!
- by David
- Apr 02,2025
News
மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 93ன் கீழ் பைக் டாக்ஸி சேவைகளுக்கான விதிகள் உருவாக்கப்படும் வரை கர்நாடகாவில் பைக் டாக்சிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
அடுத்த 6 வாரத்துக்குள் ராப்பிடோ, ஓலா, உபர் போன்ற பைக் டாக்சி சேவைகளை கர்நாடகாவில் நிறுத்தவேண்டும் என இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷ்யாம் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் அந்த மாநில அரசை 3 மாத காலத்திற்குள் பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய பைக் டாக்சி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்வார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன.